districts

img

ஸ்மார்ட் புல்டோசர் கருவியை கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, டிச.14 - பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத் தின்கீழ், ஸ்மார்ட் புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3 ஆம்  இடம் பிடித்த மாணவர்களை புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெள்ளிக் கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “மாநில அளவில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், நடத்தப்பட்ட அறிவியல் கண்டு பிடிப்பு போட்டியில், பூவை மாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 ஆம்  வகுப்பு மாணவர்கள் அன்பரசன், ஐயப்பன்  ஆகியோர் அறிவியல் சார்ந்த புதுமை  கண்டுபிடிப்பான, எங்கிருந்து வேண்டுமா னாலும் இயக்கக் கூடிய ஸ்மார்ட் புல்டோசர் கருவியை கண்டுபிடித்து மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்தமைக்காக ரூ.10,000-க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங் களை மாணாக்கர்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு, கல்வி யில் சிறந்து விளங்கிட வேண்டும்” என்றார்.  முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந் தாங்கி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.