districts

கொல்லுமாங்குடியில் மக்கள் நேர்காணல் முகாம்

திருவாரூர், ஏப்.19-

   திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பில் லூர், கொல்லுமாங்குடி, கடுவங்குடி ஆகிய கிராமங்களுக் கான மக்கள் நேர்காணல் முகாம் கொல்லுமாங்குடியில் நடை பெற்றது. முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 112 மனுக்கள் ஏற்கப்பட்டன.

   முகாமில் 169 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ வழங்கினார்.

   நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெ.முக மது உதுமான், ஒன்றியக் குழு உறுப்பினர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரகாஷ் (பில்லூர்), வெங்க டேசன் (கடுவங்குடி) மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி  அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.