பாபநாசம், ஜூன் 19-
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். இதில் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 990 விவசாயிகள் 1300 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரப் பிரதேசம், மகுடஞ்சாவடி,தேனி, விருதுநகர்,கொங்கணாபுரம் உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 14 வணிகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு ரூ 83 இலட்சம். தனியார் வணிகர்கள் அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7279, குறைந்தப் பட்சம் ரூ.5089, சராசரி ரூ.6389 என விலை நிர்ணயம் செய்தனர்.