கரூர், அக்.6 - கரூரில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில், சென்னையைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் சஹானா உட்பட 24 பேர் வெற்றி பெற்றனர். கரூர் பரணி பார்க் பள்ளியில் 63-வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்சிப் போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. 12,14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டி கள் நடந்தன. இதில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த 400 மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அப்துல்லா முதல் இடத்தையும், தர்ஷன் 2 ஆம் இடத்தையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பரணிதரன் 3ஆம் இடத்தை யும் பெற்றனர். பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சஹானா முதல் இடத்தையும், சுபஸ்ரீ 2 ஆம் இடத்தை யும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா 3 ஆம் இடத்தையும் பெற்றனர். 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரி வில் விழுப்புரத்தைச் சேர்ந்த கோகு லேஷ், அனிஷ்குமார், சென்னையைச் சேர்ந்த அஜய் ஆகியோரும், பெண்கள் பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சாதனா, சென்னையைச் சேர்ந்த அக்னீஸ், விருதுநகரைச் சேர்ந்த பிரியதர்ஷினி ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். மேலும் இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 24 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பின்னர், நடந்த பரிசளிப்பு விழா விற்கு தமிழக கேரம் சங்க மாநிலத் தலைவர் நாசர்கான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மனும், பரணி கல்விக் குழும தாளாளருமான மோகனரங்கன், மாநில பொதுச் செயலாளர் ‘அர்ஜூனா விருதாளர்’ மரிய இருதயம், மாநில கேரம் சங்க துணைத் தலைவரும், பரணி கல்விக் குழும முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், மாநிலப் பொருளாளர் கார்த்திகேயன், போட்டியின் தலைமை நடுவர் ஆல்வின் செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.