கரூர், செப்.29 - சென்னையில் அண்மையில் நிறைவு பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையி லான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி இந்த ஆண்டு 20 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம் வென்று மொத்தம் 141 புள்ளிகளுடன், தொடர்ந்து 12 ஆவது முறையாக பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை 12 ஆவது முறையாக வென்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளில் பங்கு பெற தேர்வாகி உள்ளது கரூர் பரணி வித்யா லயா பள்ளி. இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் 20 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 10 மாண வர்கள் வெள்ளிப் பதக்கமும், 11 மாணவர்கள் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். இவர்கள் ஆண்கள், பெண்கள் இரண்டு பிரி விலும் மற்றும் U-12, U-14, U-17 & U-19 என அனைத்து பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதன்மூலம் புள்ளி களின் அடிப்படையில் 12 ஆவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென் றுள்ளனர். தொடர்ந்து 12 ஆவது முறையாக தென்னிந் திய ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க உறுதுணை யாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர் சி.ராமசுப்பிரமணியன், முதல்வர் எஸ்.சுதா தேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, பரணி ஜூடோ பயிற்சியாளர்கள், பள்ளியின் தாளா ளரும் மாவட்ட ஜூடோ சேர்மனுமாகிய எஸ். மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகன ரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர், பெற்றோர்கள் பதக்கம் வென்ற மாண வர்களைப் பாராட்டினர்.