கரூர், ஏப்.18 - கரூர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை யொட்டி வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்கவேல் வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கரூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 1,670 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலுக் கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குப் பதிவினை செலுத்தும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணி களும் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி மையங்கள் அனைத்திலும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, தேவையான மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தேவை யான இடங்களில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், வியாழனன்று பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையம், அரவக் குறிச்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்க ளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அரவக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள பொருட்கள், வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி வித்தார்.