கரூர், ஆக.25 -
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி யில் ஜனநாயக அமைப்புகள் போராட் டம் நடத்த வேண்டும் என்ற கரூர் மாநகராட்சியின் உத்தரவுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகர குழு கூட்டம் சுங்க கேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்ட பாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, வாலிபர், மாதர் சங்கம், விசிக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கள், ஜனநாயக அமைப்புகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட் சியர் அலுவலகம், ஆர்எம்எஸ் அலுவல கம் ஆகிய பகுதிகளில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பல ஆண்டுகளாக அமைதியான முறையில் தொடர்ந்து நடத்தி வந்தன.
இந்நிலையில், கரூர் மாநகராட்சி நிர்வாகம் திடீரென கரூர் மாவட்ட ஆட்சியர், ஆர்எம்எஸ், வட்டாட்சியர் அலுவலகங்கள் பகுதிகளில் எந்தவித போராட்டங்களும் நடத்த, எந்த அமைப்பிற்கும் அனுமதி இல்லை என்றும், அதற்கு மாற்றாக மக்கள் நட மாட்டம் இல்லாத பகுதியான கரூர் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட ஒரு சில இடங்களை அறிவித்து, மாநக ராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக் கிறது. ஜனநாயகத்தின் குரலை நெறிக் கும் இந்த தீர்மானத்தை கரூர் மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தற்போதுகூட நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற உண்ணா விரத போராட்டத்தை, திமுகவினர் ஆள்நடமாட்டம் இல்லாத தலைமை தபால் நிலையம் முன்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள், தொழிலாளர்களின் கோரிக்கை களுக்காக போராடும் போது அவர் களுக்கு போராட்டத்தின் நோக்கம் சென்று சேர வேண்டும். அப்போது தான் போராட்டம் வெற்றியை நோக்கி செல்லும்.
மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குத் தான் அதிகாரம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஆர்.எம்.எஸ் அலுவலகங்கள் முன்பு தொ டர்ந்து போராட்டம் நடத்திட கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.