கரூர், ஜூலை 29-
கரூர் குறுவட்ட கேரம் போட்டியில் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பி யன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மூலம் நடைபெறும் கரூர் குறுவட்ட கேரம் போட்டி கடந்த 26.7.2023 அன்று பரணி பார்க் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஒற்றையர், இரட்டையர் என 12 பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் கரூர் குறுவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டன.
பரணி பார்க் 14 வயதுக்குட்பட்டோர் மாண வர்கள் இரட்டையர் பிரிவில் தீபன், ராகவ் முத லிடம் பெற்றனர். 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றை யர் பிரிவில் கனித் மூன்றாமிடமும், இரட்டையர் பிரிவில் கனித், கிஷோர் முதலிடமும் பெற்ற னர். 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் இளந்திரையன் மூன்றாமிடமும், இரட்டையர் பிரிவில் இளந்திரையன், பிரவீன்குமார் முத லிடமும் பெற்றனர்.
14 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் ஒற்றை யர் பிரிவில் விவேகா முதலிடமும், இரட்டையர் பிரிவில் விவேகா, வைஷ்ணவி முதலிடமும் பெற்றனர். 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் மனோஸ்ரீ முதலிடமும், இரட்டையர் பிரிவில் மனோஸ்ரீ, நவபூர்ணிமா முதலிடமும் பெற்றனர்.
19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரி வில் பிரதிக்ஷா முதலிடமும், இரட்டையர் பிரிவில் பிரதிக்ஷா, கீர்த்திஸ்ரீ மூன்றாமிடமும் பெற்ற னர். இதில் மொத்தமாக 12 பிரிவுகளில் நடை பெற்ற போட்டியில், 8 பிரிவுகளில் முதலிடமும், 3 பிரிவுகளில் மூன்றாமிடமும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு சனிக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தாளாளர் எஸ்.மோகன ரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தனர்.
உலக கேரம் சாம்பியன் மற்றும் விளை யாட்டுத் துறையில் வழங்கப்படும் உச்சபட்ச விருதான அர்ஜூனா விருதை இருமுறை பெற்ற, மரிய இருதயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார். தமிழ்நாடு கேரம் சங்க பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.