புதுக்கோட்டை, ஆக.23 - அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடையும் வகை யில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றார் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி ப.சிதரம்பரம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்கா ணிப்புக் குழு கூட்டம் அதன் தலை வர் மற்றும் சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம் பரம் தலைமையில், மாவட்ட ஆட்சி யர் மு.அருணா, முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னர் கார்த்தி ப.சிதம்ப ரம் தெரிவிக்கையில், “இக்கூட்டத் தில், பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், கிஸான் சம்மான் நிதித் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தாட்கோ உள்ளிட்ட 44 திட்டப் பணிகள் விப ரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரம், செலவு செய்யப்பட்ட நிதி விபரம், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், முடி வுற்றப் பணிகள் குறித்து சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்க ளும் அறிந்திடும் வகையில் விழிப்பு ணர்வு ஏற்படுத்திடவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொது மக்களை சென்றடையும் வகையில் சிறப்புடன் பணியாற்றிட, அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது” என்றார்.
தஞ்சாவூர்-புதுக்கோட்டை ரயில் பாதை பணிகள் தொடங்கப்படவில்லை: எம்.சின்னதுரை எம்எல்ஏ.,
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பேசியதாவது: தனி நபர்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்படுவதில்லை. வாடகை இயந்திர மையங்களும் கண்துடைப்பாகவே செயல்படுகிறது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்படவில்லை. சோலார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தில் நம் மாவட்டத்தின் தேவைக்கு அதிகமானதை மட்டும் பிற மாவட்டங்களுக்கு கொடுக்க வேண்டும். மின்மாற்றிகள் அடிக்கடி பழுதடைவதால் கையிருப்பில் கூடுதலாக மின்மாற்றிகளை வைத்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு பயிற்சிக்காக கூடுதல் நிதி செலவிடப்படுகிறது. ஆனால், பயிற்சி முடித்த யாரும் வேலைக்கு சென்றதாக இல்லை. இதிலுள்ள குறைபாடுகளை சரி செய்யவேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கலாம் என ஒப்புதல் இருந்தும்கூட ஒன்றிய அரசு அதற்கான பணிகளை தொடங்காமல் இருக்கிறது. இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பொறி.பரமசிவம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) காளியப்பன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.