தஞ்சாவூர், ஜூன் 2- தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆரம்ப சுகாதார நிலை யங்களில், புறநோயாளிகள் வருகை, உள்நோயாளிகள் அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, குழந்தைகளுக்கு நூறு விழுக்காடு தடுப்பூசி செலுத்துதல் என 19 தர வரிசை அடிப்படையில் மதிப் பீடு செய்து, தரவரிசை பட்டி யலை மாதந்தோறும் வெளி யிடப்படுகிறது. தமிழகத்தில் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கான மார்ச் மாத தர வரிசை முடிவுகள் சனிக் கிழமை சென்னையில் வெளி யிடப்பட்டன. இதில், தஞ்சாவூர் மாநக ராட்சியில் உள்ள கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் முதலிடத்தையும், சீனிவாச புரம் நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையம் 4 ஆவது இடத்தையும், கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 7 ஆவது இடத்தை யும், மகர்நோன்புச்சாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 12 ஆவது இடத் தையும் பெற்றுள்ளன. இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி சனிக்கிழமை, கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமேகலையை நேரில் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டினார். மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி, சுகாதார அலுவலர் தங்கவேல், சுகாதார ஆய் வாளர் எபின் சுரேஷ் உள் ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி கூறுகையில், “கரந்தை ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனையில், சுமார் 60 முதல் 70 கர்ப்பிணி தாய் மார்கள் வந்து ஆலோசனை பெறுகின்றனர். தாய்-சேய் நல கண்காணிப்பு மையம், கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு மற்றும் யோகா வகுப்புகள் சிறப்பாக நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டு களில் 119 சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு இந்த மருத்துவ மனையில் தில்லி மருத்துவக் குழுவினரால் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு தேசிய தர உறுதிச்சான்று கிடைக்கப் பெற்று ரூ.3 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றுள்ளது” என்றார்.