தஞ்சாவூர், செப்.29 - தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், கலை ஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளி களிடம் உரிமைத் தொகையின் பயன் களை பற்றி கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களின் முன்னேற்றத்திற் காக அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம், கல்லூரி மாணவிய ருக்கு உயர்கல்விக்கு ஊக்கமளித்திட மாதந்தோறும் ரூ.1,000 போன்ற சிறப் பான திட்டங்களின் வரிசையில், கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மகத்தான திட்டமாக மகளிர் குலம் போற்றுகிறது. இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டத்தைச் சேர்ந்த 22,660 குடும்பத் தலைவிகள், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த 69,549 குடும்பத் தலைவிகள், ஒரத்த நாடு வட்டத்தைச் சேர்ந்த 47,376 குடும்பத் தலைவிகள், பாபநாசம் வட்டத் தைச் சேர்ந்த 52,282 குடும்பத் தலை விகள், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 75,896 குடும்பத் தலைவிகள், பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 24,505 குடும்பத் தலைவிகள், தஞ்சாவூர் வட்டத் தைச் சேர்ந்த 59,735 குடும்பத் தலை விகள், திருவையாறு வட்டத்தைச் சேர்ந்த 22,470 குடும்பத் தலைவிகள், திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த 43,526 குடும்பத் தலைவிகள் என மொத்தம் இத்திட்டத்தின் வாயிலாக 4,17,999 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்” என்றார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளி கள், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கு கிற மகத்தான திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தி டம், பேராவூரணி வட்டம் கொன்றைக் காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ பிரியா, மிதியக் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராணி ஆகியோர் தெரி வித்தனர். அன்றாடம் கூலி வேலை செய்து வருகிற எங்களைப் போன்ற எளி யவர்களின் வாழ்க்கையில் மாதந்தோ றும் ரூ.1000 வழங்குவது தமிழக அரசின் சிறந்த திட்டமாகும். இந்த நல்ல திட்டத்தை தந்துள்ள முதலமைச்ச ருக்கு நன்றி என்றனர். இவ்வாறு கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தஞ்சா வூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொகுப்பு ரெ.மதியழகன், எம்.காம்,பி.எல்., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்.