districts

img

திருவாரூர் புத்தகத் திருவிழாவில் நீதியரசர் சந்துரு பங்கேற்பு

திருவாரூர், பிப்.6 - திருவாரூர் மாவட்ட புத்தகத் திருவிழா புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.எஸ்.நகரில் நடைபெற்று வருகிறது.  திங்களன்று நடந்த புத்தகத் திரு விழாவில் மேனாள் நீதியரசர் சந்துரு பங்கேற்று ‘நூலைப்படி’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் விஷ்ணு புரம் சரவணன் ‘கதைகளே குழந்தை களின் பெஸ்ட் ஃபிரண்ட்’ என்ற தலைப்பில்  கருத்துரை ஆற்றினார். புத்தகத் திருவிழா வில் கவிதை, பேச்சுப் போட்டிகளில் கலந்து  கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் கலை  நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள், கருத்துரையாற்றிய சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். புத்தகத் திருவிழாவில் பிப்.7 (புதன் கிழமை) அன்று மருத்துவர் கு.சிவராமன் ‘இளங்கன்று நோயும் அறியாது’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகிறார். கவிஞர்  நந்தலாலா ‘கதைகளால் ஆன உலகம்’ என்ற  தலைப்பில் கருத்துரை ஆற்றுகிறார்.