தஞ்சாவூர், ஜூலை 10-
சென்னையில் நடைபெறும் பெருந் திரள் அமர்வு போராட்டத்தை விளக்கி ஜூலை 29 அன்று தஞ்சையில் மாவட்ட மாநாடு நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் உள்ள தொமுச பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐஎன்டியூசி மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி மாநி லச் செயலாளர் தில்லைவனம், மாவட்டச் செயலாளர் துரை.மதிவாணன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராமன் மற்றும் தொமுச நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், “மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றிய, மாநில பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது; போராடி பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்பாக சுருக்கியது; விலைவாசி உயர்வை குறைக்கத் தவறியது; பொருளாதார வளர்ச்சி, சிறு-குறு தொழில் பாதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒன்றிய மோடி அரசு நாட்டையும், மக்களையும் பாது காக்க தவறியது; மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது ஆகியவற்றை கண் டித்து ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடை பெற உள்ளது.
இதனை விளக்கி ஜூலை 29 அன்று தஞ்சாவூரில் மாவட்ட மாநாடு நடத்துவது என்றும், சென்னைப் போராட்டத்தை விளக்கி தஞ்சை மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் செய்வது” என்றும் தீர்மானிக்கப்பட்டது.