புதுக்கோட்டை, ஜன.18- புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் பொங் கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி புதன் கிழமையன்று நடைபெற் றது. போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சா வூர், சிவகங்கை, இராமநாத புரம் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த 594 காளை கள் அவிழ்த்துவிடப்பட்டன. 6 குழுக்களாக 234 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை தீரத்துடன் அடக்கினர். போட் டியை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வரு வாய் கோட்டாட்சியர் முரு கேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். அவர் களுக்கு அங்கு தயார் நிலை யில் இருந்த மருத்துவக் குழு வினர் சிகிச்சை அளித்தனர். பலத்தக் காயமடைந்த 5 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரி மையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக் கிள், பிரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங் கப்பட்டன. திருச்சி சூரியூரைச் சேர்ந்த சிவா, 25 காளை களை அடக்கி சிறந்த மாடு பிடி வீரராக தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் மோட்டார் பைக்கை பரிசளித் தார். 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.