கும்பகோணம், மே 17- திமுக தஞ்சை வடக்கு மாவட்ட அவசர செயற் குழு கூட்டம் புதன்கிழமை மாலை கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வ ரத்தில், மாவட்ட கழக அவைத்தலைவர் நசீர் முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம், மயி லாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பி னர் ராமலிங்கம், மாவட்ட துணைச் செயலா ளர் அய்யாரசு மற்றும் கழக செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், முத்தமிழறிஞர் டாக்டர் கலை ஞரின் நூற்றாண்டு விழா நிறைவு பெறுவதை யொட்டியும், ஜூன் 3 ஆம் தேதி அவரது பிறந்த தினத்தையொட்டியும், மாநகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக அளவில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்ட உதவி கள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் நடத்துவது மற்றும் ஏழை-எளிய மாணவ, மாணவர்களுக்கு நோட்டு புத்த கங்கள் வழங்குவது, முதியோர் இல்லங்கள், கருணை இல்லங்களில் அறுசுவை உணவு வழங்கி தலைவர் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதாவிற்கு ஆதரவாக, தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து கூட்டணி கட்சி களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.