districts

img

சர்வதேச இளைஞர் தினம்: திருச்சியில் மினி மாரத்தான்

திருச்சிராப்பள்ளி, செப்.9 - சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய மினி மாரத்தான், அரிஸ்டோ வளைவு, மன்னார்புரம் வளைவு, டி.வி.எஸ் டோல்கேட் வழியாக சென்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் 750 பேர் கலந்து கொண்டனர்.  போட்டியில் வென்ற மாணவர், மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000, 2வது பரிசு ரூ.7,000, 3வது பரிசு ரூ.5,000 மற்றும் ஆறுதல் பரிசுகள் ரூ.1,000 வீதம் 13 பேருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு, மாவட்ட திட்ட மேலாளர் மணிவண்ணன், மாவட்ட மேற்பார்வையாளர் (எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு) புஷ்பலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.