தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூர் அருகே நீலகிரி ஊராட்சி, திருவள்ளுவர் குடியிருப் போர் நலச்சங்கம் சார்பில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் அமைக் கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா திறப்பு விழா சங்கத் தலைவர் வே.மதி யரசு தலைமையில் நடைபெற்றது. நீலகிரி ஊராட்சி மன்றத் தலை வர் வள்ளியம்மை பாஸ்கரன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அ.உதயகுமார், மகாராஜா சில்க் ஹவுஸ் உரிமையாளர் எஸ். முகமது ரஃபி, ரகுமான் நகர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரபீக் ஆகியோர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை திறந்து வைத்தனர். பின்பு, பூங்கா வில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, பூங்கா அமைப்புக் குழு தலைவர் தங்க.ராதா கிருஷ்ணன் வரவேற்றார். நலச் சங்க பொரு ளாளர் கோ.பன்னீர்செல்வி நன்றி கூறினார்.