திருத்துறைப்பூண்டி, ஏப்.22-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே வன்னியடி கோமல் ஊராட்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற தலைவரின் முன் முயற்சி யால் ரூ.3.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய மயா னம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மயானத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திறந்து வைத்தார். நிகழ் வில் நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ராஜன்பாபு, திருத்துறைப்பூண்டி வட்டாட்சி யர் காரல்மார்க்ஸ், அம்மனூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.முத்துகுமரசாமி, கட்சி யின் வடக்கு ஒன்றியச் செயலாளர் டி.கதி ரேசன், ஊராட்சி மன்றத் தலைவர் பத்மினி சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.