மயிலாடுதுறை, மார்ச் 7 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரை அடுத்துள்ள ஆணைக்கோ யில் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆணைக்கோயில் செட்டியார் தெருவில் வசித்து வருகிற 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத் துக் கொண்ட விழா திங்களன்று நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் அம்மையப்பன் தலைமையில் நடந்த விழாவில் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து புதி தாக கட்சியில் இணைந்தவர்களை வர வேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஒன்றிய செயலா ளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் அமுல்காஸ்ட்ரோ, ஒன்றி யக் குழு உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை செயலாளர் சம்பந்தம் நன்றி கூறி னார்.