புதுக்கோட்டை, ஆக.13 -
புதுக்கோட்டை அருகே மாணவிகளின் குடிநீர் பாட்டி லில் சிறுநீர் கலந்த வக்கிரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே கீழையூரில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் ஒரு மாணவி வெள்ளிக்கிழமை தனது குடிநீர் பாட்டிலில் உள்ள தண்ணீரைக் குடித்ததும் வாந்தி எடுத்துள்ளார். இதற்குக் காரணம் அந்தப் பாட்டிலில் சிறுநீர் கலந் திருப்பது எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்ததில் இரண்டு மாணவர்கள், மாணவி களின் குடிநீர் பாட்டிலில் சிறு நீர் கழித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதி காரிகள் பள்ளிக்குச் சென்று சனிக்கிழமை விசாரணை நடத்தினர். குடிநீரில் சிறுநீர் கலந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்க ளையும் அழைத்து அதி காரிகள் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரும் குடிநீர் பாட்டி லில் சிறுநீர் கலந்ததை ஒப்புக் கொண்டனர்.
பின்னர், இரண்டு பேருக் கும் மாற்றுச்சான்றிதழ் அதி காரிகளால் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், அந்த மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகை யில் அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யது.