districts

செம்பனார்கோவிலில் ரூ.2 கோடிக்கு பருத்தி கொள்முதல்

மயிலாடுதுறை, ஜூலை 4 -

     மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்க ளன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் செம்ப னார்கோவில் ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

    கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில், இணை செயலாளர் சிலம்பரசன் மேற்பார்வையில் ஏலம் நடை பெற்றது.  இந்த பருத்தி ஏலத்தில் குவிண்  டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.6,619-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5,545-க்கும்,  சராசரி விலையாக ரூ.6,245-க்கும்  கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக சுமார் 3,000 குவிண் டால் பருத்தி ரூ.2 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடை பெற்றது. இந்த ஏலத்தில் 686 விவ சாயிகள் கொண்டு வந்த பருத்தி யை, தேனி, கோவை, கொங்கணா புரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாவட்டம், மாநிலங்களில் இருந்து  21 வியாபாரிகள் மற்றும் மில் அதி பர்கள் கொள்முதல் செய்தனர்.