districts

தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய போட்டியில் பொறையார் சர்மிளா பள்ளி சாதனை

மயிலாடுதுறை, ஜூலை 20-

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டப் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி யஷ்வந்தினி என்கிற பத்தாம்  வகுப்பு மாணவி தமிழ்நாடு விழா கட்டுரைப் போட்டியில்  மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான  போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.  

    அதே பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி  இரஞ்சனி தமிழ் வளர்ச்சித் துறை கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் வென்றார்.

    தமிழ்நாடு விழா நாளான ஜூலை 18 அன்று மயிலாடு துறையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யஷ்வந்தி னிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி சான்றிதழ்,  ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார். நிகழ்வில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  நிவேதா எம்.முருகன், மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டினர்.