districts

ஆற்று மணல் விற்பனையில் அரசாணை விதிகளின்படி எடுத்த நடவடிக்கை நிலை அறிக்கையை தாக்கல் செய்திடுக!

மதுரை, ஏப்.27- ஆற்று மணலை பொதுமக்கள் மற்  றும் லாரி உரிமையாளர்களுக்கு நேரடி யாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தமிழக அரசு  வெளியிட்டுள்ள அரசாணையின்படி விதிகளை பின்பற்றப்படுகிறதா என் பது குறித்து நிலை அறிக்கையை தாக்  கல் செய்ய வேண்டும் என்று தமிழக அர சுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் கிழக்கு மாவட்டம் மணல் மற்  றும் எம் சாண்ட் லாரி உரிமையாளர் கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில் கட்டு மான பணிகளுக்காக பயன்படுத்தப் படும் மணலை தமிழ்நாடு அரசு சார்  பாக கிடங்குகளை அமைத்து அரசு  இணையதளத்தில் பதிவு செய்த பின் ன ரே விற்கப்படுகிறது. இதில் பொதுமக் கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பதிவு செய்கின்றனர். ஆனால் தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலையை விட  அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு அள வுக்கு அதிகமாக விலையை நிர்ண யித்து மணல் விற்கப்படுகிறது. மேலும்  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அர சாணை விதிகளை பின்பற்றாமல் அள வுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு வந்து அதிக  விலைக்கு விற்கின்றனர். மேலும் பொது மக்களின் பெயரில் அரசு இணைய தளத்தில் பதிவு செய்து அரசு அதிகாரி களே போலியான வாகன எண்ணை  பயன்படுத்தி மணலை கள்ளச்சந்தை யில் அதிக விலைக்கு விற்கின்றனர். இத னால் பொதுமக்கள் மற்றும் லாரி உரி மையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்  படுகின்றனர். அரசு நிர்ணயித்த விலை யை விடவும், அரசாணையில் உள்ள  விதிகளை பின்பற்றாமலும் இது போன்று அரசு அதிகாரிகளே ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க குழு அமைத்து நட வடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்  கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக ஆற்று மணலை விற்க  அரசு நடவடிக்கை எடுத்து, தமிழக அரசு  வெளியிட்டுள்ள அரசாணையின்படி விதிகளை பின்பற்றி குவாரி மற்றும் மணலை விற்க நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்  தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் உள்ள விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் மாதத் திற்கு ஒத்திவைத்தனர்.