மயிலாடுதுறை, ஜூலை 7- தர்மபுரியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் குடியேறும் போராட்டத்தில் காவல்துறை அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டு மாநில தலைவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறை யில் மாவட்டத் துணைத் தலைவர் டி. கோவிந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இணை செயலாளர் எம்.சொக்கலிங்கம், வட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் லட்சுமி, வட்டச் செயலா ளர் மகேந்திரன் தரங்கம்பாடி வட்டத் தலைவர் ஜி.செல்வராஜ், சீர்காழி இளங்கோவன், வட்ட துணைத் தலை வர் ஆனந்தன் மற்றும் முன்னணி ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.