திருச்சிராப்பள்ளி, ஜூலை 14- திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலு வலர் அபிராமி தலைமை யில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட் பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முக வர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரி வாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரி வாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டமானது ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலு வலகத்தில் ஜூலை 16 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறது. இந்த குறைதீர் கூட்டத் தில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன் னார்வ நுகர்வோர் அமைப் புகள் கலந்து கொண்டு எரி வாயு உருளை விநியோ கம் தொடர்பான குறைபாடு களை தெரிவித்து பயனடை யுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.