districts

திருநங்கைகளுக்கு குறைதீர் முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 7-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திரு நங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் வெள்ளிக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, தொழில் கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய கோரிக்கை கள் அடங்கிய 4 மனுக்களை திருநங்கைகள் மாவட்ட வருவாய்  அலுவலரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், அதன்மீது மீது தகுந்த நட வடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத்துறை மற்றும் இந்தியன் வங்கி, ஊரக சுய  வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் திரு நங்கைகளுக்கான இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி யையும் மாவட்ட வருவாய் அலுவலர் தமா.செல்வி தொடங்கி  வைத்தார்.

;