தஞ்சாவூர், மே 17- மண் வளம் காக்கும் தொழில்நுட்பங் கள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மண்ணின் வளத்தை பேணிக் காக்க வேண்டுமெனில், ஒவ்வொரு விவசாயி யும் தனது விளைநிலத்தின் மண்ணை அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும். மண்ணில் உள்ள தழை, மணி மற்றும் சாம்பல்சத்து தவிர, மண்ணில் உள்ள நுண் சத்துகளின் அள வையும் கண்டறிதல் அவசியமாகும். மண்வள அட்டை பரிந்துரையின்படி உரமிடல் வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் தனது வயல் முழுவதும் நடந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மண்வெட்டி கொண்டு மண்ணை வெட்டி, உற்று நோக்கினால் மண்புழு இருப்பதின் அறிகுறிகள் தென்பட்டால் அத்தகைய நிலம் வள மான மண் என்பதை அறியலாம். வயலில் உள்ள மேல்மண்ணை ஏர் கலப்பை கொண்டோ அல்லது களைக் கொட்டு கொண்டோ அதிகம் கிளறாமல் இருப்பதன் மூலம், மண்ணில் உள்ள நுண் ணுயிரிகள் பாதுகாக்கப்படுவதுடன், இந்நுண்ணுயிர்களால் 30 சதவீதம் மண்ணின் மேல்பரப்பில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படுகிறது. ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடாமல் நெல், உளுந்து, நிலக்கடலை, எள், சோயா பீன்ஸ் போன்ற பயிர்களை மறுசுழற்சி முறையில் பயிரிடுவதன் மூலம், மண்ணில் உள்ள சத்துகள் நிலைப்படுத்தப் படு வதுடன் மண்ணில் அங்ககச் சத்து மேம் படுத்தப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. அங்ககத் தன்மை அதிகரிக்கும்போது மண்ணில் காற்றோட்டம் மற்றும் மண்ணில் நீர்ப்பி டிப்புத் தன்மை அதிகரிக்கிறது. மூடுபயிர் களாக பயறுவகை பயிர்களை பயிரிடு வதன் மூலம் மண் அரிமானம் தடுக்கப்படு கிறது. மண்ணில் உள்ள சத்துகள் விரை யம் ஆவது தடுக்கப்படுகிறது. மணற் பாங்கான நிலங்களில் தண்ணீர் அடித்துச் செல்வது தடுக்கப்படுகிறது.
பூச்சி நோய் தாக்குதலின் அளவு குறைகிறது. நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிக மாகின்றன. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை விவசாயிகள் கடைப்பிடிப்பது அவசியமாகும். இம்முறைகள் மண்வளத் துடன் நேரிடையாக தொடர்புடையவை. நன்மை செய்யும் பூச்சியினை அதிகப் படுத்தும் நோக்கில் வண்ண மலர்கள் தரும் சாமந்திப் பூ, சூரியகாந்தி மற்றும் வெண்டை போன்ற பயிர்களை வரப்பு களில் பயிரிட வேண்டும். தீமை செய்யும் பூச்சிகளை கட்டுக்குள் வைத்திட முடிந்தவரை பூச்சிமருந்து உப யோகப்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும். சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மண்ணில் மடக்கி உழுதல் வேண்டும். நடவு வயலில் எருக்கு, கொழிஞ்சி, கிளரிசிடியா போன்ற பசுந் தழை உரங்களை அவசியம் பயன் படுத்த வேண்டும். நெல், உளுந்து, எள், நிலக்கடலை போன்ற பயிர்களின் கழிவுகளை மண்ணி லேயே இட்டு மடக்கி உழவு செய்தல் மூல மும் மண்ணின் அங்ககச் சத்தை அதி கரிக்கலாம். வேளாண்மை விரிவாக்க மையங் கள் மூலம் விநியோகம் செய்யப்படும் திரவ வடிவிலான உயர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீ ரியா, ரைசோபியம் போன்ற திரவ உயிர் உரங்களை நேரடியாக நடவு வயலில் இடுவதன் மூலம் நன்மை செய்யும் பாக்டீ ரியாக்களின் எண்ணிக்கை மண்ணில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் மண் வளத்தினை மேம்படுத்தலாம். எனவே, விவசாயிகள் மேற்கண்ட அனைத்து தொழில் நுட்பங்களையும் பின்பற்றி மண்வளத்தினை பேணிக் காத்திடலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.