districts

மே 30 முதல் கும்பகோணம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கலந்தாய்வு

கும்பகோணம்,  மே 27-

    கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) 2023-2024 ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9 வரை நடைபெறுகிறது

    இதில் மே 30 மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு துறையில் வெற்றி பெற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு சலுகைகள் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் கல்லூரியில் காலை ஒன்பது மணிக்கு முதல் கட்ட கலந்தாய்வு சேர்க்கை நடைபெறுகிறது.

   ஜூன் 1 அன்று வணிகவியல், வாணிக மேலாண்மை, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடத்திற்கும், ஜூன் 2 அன்று பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா தியல் ஆகிய பாடங்களுக்கும் ஜூன் 3 அன்று கணிதம், இயற்பியல், வேதியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கும் ஜூன் 5 அன்று தமிழ், ஆங்கிலம், தாவரவியல், புள்ளியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு சேர்கைக்கான தேர்வும் மற்றும் காத்திருப்பு பட்டியலும் நடைபெறுகிறது.

    பின்னர் காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஜூன் 6 அன்று வணிகவியல், வணிக மேலாண்மை, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் ஜூன் 7 அன்று பொருளியல், வரலாறு, இந்திய பயன்பாடு மற்றும் சுற்றுலாவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் ஜூன் 8 அன்று கணிதம், இயற்பியல், வேதியல், விலங்கியல் ஜூன் 9 அன்று தமிழ், ஆங்கிலம், தாவரவியல் புள்ளியல் ஆகிய பாடத்திட்டங்களில் காத்திருப்பு பட்டியல் உள்ளவர்களும் கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    அட்டவணை கல்லூரி இணையதளத்தில் https:www.gacakum.ac.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேரடி கலந்தாய்விற்கு குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற அனைத்து மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.