மயிலாடுதுறை, செப்.15- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அர சின் இலவச மிதிவண்டிகள் வழங்கப் பட்டது. சங்கரன்பந்தல் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் எஸ். வேம்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு 230 மாணவ -மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார். இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சித்திக், ஊராட்சி மன்றத் தலைவர் லெனின் மேசாக், மாவட்டக் கவுன்சிலர் துளசி ரேகா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் எச். ராமையன், ஷாஜகான், ஸ்ரீதர், கே. சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர். பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி, திருக்கடையூர் அரசி னர் மேல்நிலைப் பள்ளி,ஆக்கூர் அரசி னர் மேல்நிலைப்பள்ளி, ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி, தில்லையாடி வள்ளி யம்மை நினைவு மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 11- ஆம் வகுப்பு பயின்ற 653 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கிப் பேசினார்.