தஞ்சாவூர், டிச.8 - தமிழ்நாடு வருவாய்த் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோம சுந்தரம் 20 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலரஞ்சலி மற்றும் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எஸ்.டி.எஸ் பிறந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டங்காடு கிராமத்தில் நடைபெற்றது. அங்குள்ள அவரது சிலைக்கு கிராமத்தினர், உறவி னர்கள் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்ச்சி க்கு கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் தலைமை வகித் தார். நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேரும் மாணவருக்கான உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயை மாணவன் எஸ்.வி.பிரஜ னுக்கு, கல்லூரி இயக்குனர் டி.சுவாமிநாதன் வழங்கி னார். விபத்தில் கால் இழந்த மாணவர் கார்த்திகேயனுக்கு மருத்துவ உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாயை கல்லூரி இயக்குனர் அத்தி ஆர்.ஏ.மாணிக்கம் வழங்கினார்.