districts

img

புலியூர்குறிச்சி முன்னாள் செயலாளர் இ.மணிகண்ட தாஸ் காலமானார்

நாகர்கோவில், டிச.17- கன்னியாகுமரி மாவட்டம் புலி யூர்க்குறிச்சி சிபிஎம் கிளையின் முன்னாள்  செயலாளரும், பத்மநா பபுரம் நகர்மன்ற முன்னாள் உறுப்பி னருமான இ.மணிகண்ட தாஸ் (55)  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலை யில் வெள்ளியன்று (டிச.17) கால மானார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக செயல்பட்டதால் சமு தாய விலக்கு செய்யப்பட்டார். அந்த நிலையிலும் கட்சியின்  சார்பில் போட்டியிட்டு மக்களின் பேராதரவுடன் நகர் மன்ற  உறுப்பினரானார். கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு மனைவி  கிரிஜா, மகள் டாக்டர் ஸ்ரீபகவதி, மகன் சிவநேஸ் உள்ளனர். நாகர்கோவில் பீச் ரோடில் கலைநகரில் உள்ள வீட்டில்  வைக்கப்பட்டிருந்த இ.மணிகண்ட தாஸ் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மாதவன், ஏ.வி.பெல்லார்மின், எம்.அண்ணாதுரை, அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், உஷா பாசி, மாநகர செயலாளர் கே. மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.