districts

img

தைல மரங்கள் தண்ணீரை உறிஞ்சும் என்பது வதந்தி

அரியலூர், ஜூன் 26 - தைல மரங்கள் தண்ணீரை உறிஞ்சும் என்ற வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என ஜெயங்கொண்டத்தில் நடை பெற்ற தைலமர கருத்தரங்கில் வன மரபியல்  துறை அதிகாரி பேசினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் மண்டபத்தில், கரூரில் அமைந் துள்ள தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறு வனம் சார்பில் விவசாயிகளுக்கான தைல மரம் மற்றும் சவுக்கு மர சாகுபடிக்கான கருத் தரங்கம் நடைபெற்றது.  தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன  கள அலுவலர் கார்த்திக் மணி வரவேற் றார். சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட வன அலுவலர் முனைவர் இளங்கோவன், தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தின் விருத்தாச் சலம் மண்டல மேலாளர் ராஜேஷ் ஆகி யோர் வனத்துறை திட்டங்கள் பற்றியும் தைல  மர வளர்ப்பின் பயன்கள் பற்றியும் சிறப்புரை யாற்றினர்.  வன மரபியல் மற்றும் மரப்பெருக்க துறை யின் தலைவர் முனைவர் சிவக்குமார், வன விரிவாக்க துறையின் தலைவர் முனைவர் சர வணன் ஆகியோர் பேசுகையில், “மழை குறைவாக உள்ள மானாவாரி நிலங்களில் தைலமர சாகுபடி பற்றி விரிவாக எடுத்துக் கூறி, தைல மரம் தண்ணீர் உறிஞ்சும் என்ற வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றும், அது பற்றிய வதந்திகளுக்கு அறி வியல் பூர்வமாக விளக்கம் அளித்தும், தைல  மரங்கள் தண்ணீரை உறிஞ்சுவது இல்லை. அதிகளவில் தைல மரங்களை விவசாயிகள் பயிர் செய்து பயன்பெறலாம்” என்றனர். உதவி பொதுமேலாளர் ரவி மற்றும் முதன்மை மேலாளர் முனைவர் செழியன் விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்க ளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இப்பயிற்சியில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார்  500 விவசாயிகள் பங்கேற்றனர்.  முன்னதாக கருத்தரங்கத்திற்கு வந்தி ருந்த விவசாயிகள், கூட்ட அரங்கில் அமைக் கப்பட்டிருந்த தைலம் மற்றும் சவுக்கு மரங்கள், கண்காட்சியை பார்வையிட்டனர். துணை மேலாளர் நடராஜன் நன்றி கூறினார்.