districts

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 11 -

       தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

      கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகர ணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கி கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகிய சேவைகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https:// www.tnesevai.tn.gov.in/  citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

    இச்சேவைகளை மாற்றுத்திறனாளிகள் உடனே பயன்படுத்திடும் வண்ணம் இம்மாதமே இ-சேவை மூல மாக விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். ஜூலை மாத இறுதி வரை விண்ணப்பங்களை இ-சேவை மூலமாக வும் நேரடியாகவும் பெறலாம். எனவே ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமே பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மாற்றுத்  திறனாளி பயனாளிகள் இ-சேவை வழியாக விண் ணப்பிக்க வேண்டும்.  

    மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி யர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

;