புதுக்கோட்டை, மே 18-
ஒன்றிய அரசின் ரயில்வே மற்றும் வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணை யம், ரயில்வே தேர்வு குழுமம் மற்றும் வங்கித் தேர்வு குழுமம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றிபெறும் நோக்கில் ஒருங்கிணைந்த கட்டண மில்லா பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் மே 25 அன்று தொடங்கப்பட வுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் 150 மாணவர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கான பாட நூல்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் https://www. naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. இப்பயிற்சி வகுப்பில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20 ஆகும்.