தஞ்சாவூர், ஜூன் 1-
செம்பியன் மகாதேவிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தூர்வார வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதியில் மீன்பிடி இறங்கு தளத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச் சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செம்பியன் மகாதேவிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், “செம்பியன் மகாதேவிப் பட்டினம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். சுமார் 200 குடும்பங்கள் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குத லால் மீன்பிடி துறைமுகம் பாசியும், சேறுமாக 500 மீட்டருக்கு மேல் தூர்ந்துவிட்டது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித்து விட்டு கரை வந்து சேர முடியாமல் சிரமப்படு கிறோம். 500 மீட்டருக்கு மேல் படகை கடலில் நிறுத்திவிட்டு, பிடித்து வரும் மீன்களை தலை யில் சுமந்து பாசி சேற்றில் நடந்து வந்து கரை சேர வேண்டிய நிலை உள்ளது. தினந்தோறும் மீன்பிடித் தொழிலில் செய்து வருகிறோம். துறைமுகத்தை தூர்வாரி தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு மனு கொடுத்தும், இதுநாள் வரை துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படவில்லை.
துறைமுகத்தில் வாய்க்கால் வெட்டித் தருவதாகக் கூறி சென்னையிலிருந்து வந்த பொறியாளர் 2019 ஆம் ஆண்டு ஆய்வு செய்து, சென்னை மீன்துறை இயக்குநருக்கு, தஞ்சாவூர் மீன்வளத் துறை உதவி இயக்கு நர் மூலம் ஆய்வு அறிக்கையும் அனுப்பப் பட்டுள்ளது.
எங்கள் பகுதி அருகில் உள்ள சம்பை பட்டினம், காரங்குடா, பிள்ளையார் திடல், அடைக்கத்தேவன், கொள்ளுக்காடு ஆகிய இடங்களில் உள்ள முகத்துவாரம் தூர்வாரப் படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், எங்கள் பகுதி மட்டும் விடுபட்டுள்ளது. எனவே மீனவர்களின் சிரமத்தை போக்க துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.