districts

மீன்கள் விலை குறைவு மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி, ஜூன் 25-

    தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்  பிடிக்க செல்லாத காரணத்தினாலும், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதாலும், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்களின் விலை  அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஜுன் 17 முதல்  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்  பிடிக்க சென்றனர். ஆனாலும் கடல் பகுதியில் பலத்த  காற்று வீசியதால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடந்த 80  நாட்களாக மீன்களின் விலை குறையாமல் உயர்ந்தே காணப் பட்டது. தற்போது அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இதனால் மீன்களின் விலை குறைய தொடங்கி உள்ளது. விலை குறைய  தொடங்கியதால் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்க ளும் ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றனர்.