தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் திங்களன்று மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் எழுச்சியுடன் துவங்கியது. முன்னதாக விஜயா திரையரங்கு அருகிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி துவக்கிவைத்தார். அண்ணாசிலை, கிட்டப்பா அங்காடி, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு தரங்கை சாலை வழியாக கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியவாறு பொதுக்கூட்டம் நடைபெற்ற சின்னக்கடைவீதிக்கு வந்தடைந்தனர். மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்ரமணியன், மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான டில்லிபாபு, சங்கத்தின் மாநில அமைப்புக்குழுவின் நெ.இல.சீதரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ்,மாவட்ட தலைவர் டி .சிம்சன், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.விஜய், மாவட்ட தலைவர் த.இராயர், மாவட்ட பொருளாளர் இயற்கை விவசாயி அ.இராமலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.