தஞ்சாவூர், அக்.30- தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சா வூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகு படி செய்யப்படுவது வழக்கம். குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப் படும். ஆனால் கடைமடைக்கு ஒவ்வொரு ஆண்டும் தாமதமாகத்தான் தண்ணீர் வந்து சேர்கிறது. நடப்பாண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் டெல்டா மாவட்ட பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வந்து சேர்ந்தது. அங்கி ருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் பட்டது. தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு இல்லாததால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கடைமடைப் பகுதியில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு முறை வைத்து தண்ணீர் விடப்பட்டதால் முற்றி லும் பாதிக்கப்பட்டது. திங்கள்கிழமை பேராவூரணியில் சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கடைமடைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை நீரையும், ஆழ்துளைக் கிணறு களையும் நம்பி, மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு அருகே புதுக்குடியிருப்பு பகுதி யில், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப் பில் விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளனர். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலை சமன்படுத்தி, சம்பா சாகு படிக்கு நாற்றங்கால் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக நாற்று விட்ட விவ சாயிகள் தற்போது, தங்கள் வயல்களில் நடவுப் பணியை மேற்கொண்டு வருகின்ற னர்.