districts

img

குறுவை சாகுபடிக்கு இதுவரை காப்பீடு அறிவிக்கவில்லை

மயிலாடுதுறை, ஜூலை 29 - குறுவை சாகுபடிக்கு இதுவரையிலும் எந்த ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மும் முன்வரவில்லை. தமிழக அரசும் அது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு  செய்ய ஜூலை 31 இறுதி நாள் என அறிவித் திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மயி லாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமை புறக்கணித்து, தரையில் அமர்ந்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் தலை மையில் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். முகாமில் கலந்து கொள்ளாத மாவட்ட ஆட்சியரை கண்டித் தும், உடனடியாக பயிர் காப்பீட்டுக்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும் முழக்கங் களை எழுப்பினர். விவசாயிகள் சங்க மாவட்ட  தலைவர் டி.சிம்சன் மற்றும் விவசாயிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்