தஞ்சாவூர், ஆக.30- நீர் மேலாண்மையில் நீர்வளத் துறை அதிகாரிகளின் செயல்பாடு களை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முழக்கங் களை எழுப்பினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை யில் நடைபெற்றது. துறை அதிகாரி கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது. கல்ல ணைக் கால்வாய் ஆற்றில் முழு கொள்ளளவு எவ்வளவு, அதில் ஏன் குறைந்தளவு தண்ணீர் செல்கிறது. வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீர் போய் சேரவில்லை. ஆனால் உபரி நீர் கொள்ளிடத்தில் ஏன் இவ்வளவு திறந்து விடப்படு கிறது என விவசாயிகள் அடுக்கடுக் காக கேள்விகளை எழுப்பினர். அதற்கு நீர்வளத்துறை அதி காரிகள் கூறுகையில், “கல்ல ணைக் கால்வாய் ஆற்றில் 3,500 கன அடி திறந்து விடப்படுகிறது. கல்லணைக்கு வரும் தண்ணீரில் 10 சதவீத தண்ணீரை கொள்ளிடத் தில் விட வேண்டும் என்பது விதி. இதில் குடிநீர் மற்றும் அணைக்க ரைக்கு கீழே பாசனத்துக்கும் தண்ணீர் தேவை என்பதால் தண்ணீர் திறந்து விடப்படுகிறது” என்றனர். அப்போது, கல்லணைக்கு அரு கில் கடையக்குடி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் வறண்டு காணப் படுகின்றன. ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண் டும். கல்லணைக் கால்வாயின் கடைமடைப் பகுதிக்கு இதுவரை தண்ணீர் செல்லவில்லை. அந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங் களுக்கு தண்ணீ்ர் செல்லவில்லை, மாவட்டம் முழுவதும் நீர் நிலை கள் வறண்டுள்ளன. நீர்மேலா ண்மையில் நீர்வளத்துறை அதி காரிகள் செயல்பாடு சரியில்லை என மாவட்ட ஆட்சியர் முன்னிலை யில் முழக்கங்களை எழுப்பினர். அதற்கு நீர்வளத்துறை அதிகா ரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால் விவசாயிகளுக்கும்- அதிகாரி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு விவசாயிகளையும், அதிகாரிகளையும் சமாதானப் படுத்தி, விவசாயிகளின் குறை களை அதிகாரிகள் தீர்த்து வைக்க வும், கூடுதல் நீரை கல்லணைக் கால்வாயில் திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஆறு, வாய்க்கால் களில் நீர் செல்வதை கண்கா ணிக்கும் லஸ்கர் எனப்படும் பாசன உதவியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர். எவ்வளவு காலிப்பணி யிடங்கள் உள்ளது என்பது குறித்த அறிக்கையை இரு நாட்களுக் குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறந்திடுக! தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட நெல் மூட்டையை 50 கிலோ கொண்ட மூட்டையாக கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந் துரை செய்ய வேண்டும். குறுவை சாகுபடி நெல் கொள்முதலுக்கு கூடு தல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கூட்டுறவு வங்கி களில் கடன் பெற குத்தகை சாகு படி விவசாயிகள், நில உரிமை யாளர்களிடம் அதற்கான ஒப்பந்த நகலை பெற்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் பதிலளித்து பேசி னார்.