districts

திருச்சி முக்கிய செய்திகள்

தமிழ் பல்கலை.யில் கண் பரிசோதனை முகாம் 

தஞ்சாவூர்,  மார்ச் 19-  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் வாஸன் கண்  மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோ தனை முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.   துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை  வகித்து, முகாமைத் தொ டங்கி வைத்துப் பேசி னார். வாஸன் மருத்துவ மனை தலைமை மருத்துவ  அலுவலர் டாக்டர் ஜி.கே. ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமில், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலு வல் நிலைப் பணியா ளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் 400 பேர் பயன் பெற்றனர்.

படைக் கலன்களை  ஒப்படைக்க அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 19- நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதால், 16.3.2024 பிற் பகல் முதல் தேர்தல்  நடத்தை விதிகள் அம லுக்கு வந்துள்ளன. இத னால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரகப் பகுதி  மற்றும் மாநகரப் பகுதி யில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிம தாரர்கள், தங்களது படைக்கலன்களை, தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாது காப்பு கிடங்கிலோ உட னடியாக ஒப்படைத்து ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றப் பிறகு, மீண்டும் தங்கள் படைக்கலனை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒப்படைக்கத் தவறும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு-188 இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

ரூ.12.91 லட்சம் பணம் பறிமுதல்

கரூர், மார்ச் 19 - கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலையாக  நின்று ஆய்வு செய்யும் குழுவினரும்; சுழற்சி முறையில் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாயன்று கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் 5 வாகனங்களில் ரூ.4,12,630, அரவக்குறிச்சி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 வாகனங்களில் ரூ.3,35,220,  குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 வாக னங்களில் ரூ.3,38,388, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 வாகனங்களில் ரூ.2,05,290  என 16 வாகனங்களில், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு  வந்த மொத்தம் ரூ.12,91,528 பணத்தை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரிய  கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மின்னரங்க பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின்னரங்க பயிற்சி முகாம் திருச்சி வெண்மணி இல்லத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில  தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு, மின்னரங்க மாநில உபகுழு கன் வீனர் ராசேந்திரன் அறிக்கை வாசித்தார். ‘நாடாளுமன்றத் தேர்தலும் நமது கடமைகளும்’ என்ற தலைப்பில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி  பெற பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக மின்னரங்க உபகுழு பழனிவேல் வரவேற் றார். தமிழ்நாடு மின் உயர்வு மாநில துணைத் தலைவர் ரெங்க ராஜன் நன்றி கூறினார்.

தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
240 உர மூட்டைகள் பறிமுதல்

தஞ்சாவூர், மார்ச் 19 - தஞ்சாவூர் அருகே உரிய ஆவணமின்றி லாரியில் கொண்டு வரப்பட்ட 240 உர மூட்டைகளைத் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் பறக்கும்  படை அலுவலர் சி.அஜய்ராஜ் தலைமையில், காவல்துறையி னர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது சேலத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.  6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்த தும், அதற்குரிய ஆவணங்கள் ஓட்டுநரிடம் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து, உர மூட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்ப டைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் காண்பித்து எடுத்துச் செல்லுமாறு லாரி ஓட்டுநரிடம் தேர்தல் பறக்கும் படை யினர் அறிவுறுத்தினர். ரூ.1.13 லட்சம் பறிமுதல் இதேபோல, தஞ்சாவூர் அருகே திருவையாறு சட்டப்பேர வைத் தொகுதிக்குட்பட்ட நெடார் வெட்டாறு பாலம் பகுதியில்  தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஏ.ராஜீவ்பாண்டி தலைமை யில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது லாரியில் ரூ. 1.13  லட்சம் ரொக்கம் இருந்ததும், கும்பகோணத்திலுள்ள நெகிழி  முகவரிடம் நெகிழி வாங்குவதற்காகக் கொண்டு செல்வதும்,  ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாததும் தெரிய வந்தது.  இதையடுத்து ரூ.1.13 லட்சம் ரொக்கத்தைப் பறக்கும் படை யினர் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சட்டமன்றத் தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு  இயந்திரங்கள் ஒதுக்கீடு

தஞ்சாவூர், மார்ச் 19-  நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் (1st Randomization) நிகழ்வு, மார்ச்  20 (புதன்) அன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  ஏப்.19 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்  தேர்தலுக்காக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும்  பொருட்டு முதல் (1st Randomization) நிகழ்வு மார்ச்  20 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக தரைத்தளம் அறை எண்.37இல் (தேர்தல்  கணினி அறை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல்  அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலை மையில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துணை ராணுவத்தினர்,  காவல்துறையினர் அணிவகுப்பு

தஞ்சாவூர், மார்ச் 19 - மக்களவைத் தேர்தலை அமைதியாகவும், உரிய பாதுகாப்போடும் நடத்துவதற்காக தஞ்சாவூரில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 90 பேர் அடங்கிய துணை ராணுவ  வீரர்கள் தஞ்சாவூருக்கு மார்ச் 8 அன்று வந்தனர். தஞ்சா வூரில் தங்கியுள்ள இந்தத் துணை ராணுவ வீரர்கள், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மக்களவைத் தேர்தலை அமைதி யாகவும், உரிய பாதுகாப்புடன் நடத்தவும், பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்கவும் ஏதுவாக துணை ராணுவ வீரர்கள், காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலையிலிருந்து புறப்பட்ட  இந்த அணிவகுப்பு பர்மா காலனி, பூச்சந்தை வழியாக மேரீஸ் கார்னரில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தை தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்  ராவத் தொடங்கி வைத்தார். காவல் துணைக் கண்கா ணிப்பாளர்கள் பி.என்.ராஜா, நித்யா, காவல் ஆய்வா ளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், துணை ராணு வத்தினர் என 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட னர்.

மினி பேருந்தை களஞ்சேரி வரை இயக்க கோரிக்கை

பாபநாசம், மார்ச் 19 - தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கிரஹாரத்திலிருந்து வெண்ணுக்குடி வரை இயக்கப்படும் மினி பேருந்தை களஞ்சேரி வரை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “தஞ்சா வூரிலிருந்து பள்ளியக்கிரஹாரம் வழியாக குலமங்களம்,  கூடலூர், குருங்களுர், உதாரமங்களம், களஞ்சேரி வழி யாக திருக்கருக்காவூருக்கு அரசுப் பேருந்து 1980- களில் நாள் ஒன்றுக்கு 4,5 முறை சென்று வந்தது. இந்நிலையில் 1984-க்குப் பின்னர் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வந்த 2 மினி பேருந்துகளும் கொரோ னாவிற்குப் பின் நிறுத்தப்பட்டு விட்டன.  தற்போது மீண்டும் ஒரு மினி பேருந்து வெண்ணுக் குடி வரை இயக்கப்படுகிறது. அதை களஞ்சேரி வரை  நீட்டிக்க வேண்டும். இன்னொரு மினி பேருந்தையும் இயக்க வேண்டும். அரசு பேருந்து இயக்கப்படுமானால் எட்டு ஊராட்சிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கிராம மக்கள் பயன்பெறுவர். சில இடங்களில் அரசுப் பேருந்து வந்து சென்றதன் அடையாளமாக பய ணியர் நிழற்குடைகள் மட்டுமே உள்ளன. பேருந்துகளின்  எண்ணிக்கையை உயர்த்தி, ‘பேருந்து வசதி இல்லாத கிராமமே இல்லை’ என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த  வேண்டும்” என்றனர்.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல்

விருதுநகர், மார்ச் 19- மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி  தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சிவகாசி-விருது நகர் சாலையில் தனியார் கல்லூரி அருகே  வாகனச் சோதனை நடத்தினர்.    அப்போது  அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை யிட்டனர். இதில், சிவகாசியில் கார் டீலராக உள்ள  மதின்மணி என்பவர் காரை ஓட்டி வந்தார். அவரிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்  இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் உரிய  ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனை யடுத்து மதின்மணியிடமிருந்து ரூ.1 லட்சத்து  90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர்.

‘முறைப்படி அழைக்கவில்லை’  என கூறி வெளியேறிய பாஜகவினர்

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை ஆட்சியரும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், “கூட்டத்திற்கு அதிகாரிகள் முறையாக எங்களை அழைக்கவில்லை; சரியான மரியாதை கொடுக்கவில்லை” என ஏதோ சாக்குச் சொல்லி கூட்டத்திலிருந்து வெளியேறினர். அவர்களிடம் செய்தியாளர்கள், எதற்கு வெளியேறினீர்கள் என்று கேட்டதற்கு, வந்திருந்த பாஜகவினர், “கூட்டத்திற்கு போனில் சொன்னார்கள்; முறைப்படி அழைக்கவில்லை; வேறு ஒருவரிடம் சொன்னார்; மாவட்டத் தலைவரிடம் சொல்லவில்லை” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை அளித்தனர்.  ஆனால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் சுமூகமாக முடிந்தது.

பட்டாசு திரி வைத்திருந்தவர் மீது வழக்கு

விருதுநகர், மார்ச் 19- விருதுநகர் அருகே பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகளை வைத்திருந்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகர் அருகே கவுண்டம்பட்டியில் ஆமத்தூர் காவல்துறையினர் ரோந்து  சென்றனர். கட்டபொம்மன் காலனி பகுதியில் சென்ற போது, நாகேந்திரகுமார் (29) என்பவர் அரசு அனுமதியின்றி 3 குரோஸ் பட்டாசு திரிகளை வைத்திருந்து உள்ளார். எனவே, திரிகளை பறிமுதல் செய்த போலீசார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 19 - திருச்சி புறநகர் மாவட் டம் தா.பேட்டை ஒன்றியத் தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி சந்திரமோகன் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சுப்பிர மணி, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் பாண்டியன், கட்டு மான சங்க முருகேசன், சிபிஎம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் காமராஜ், பெல் சிஐடியு (ஓய்வு) கோபால், சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் தங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சம்மேளன மாநிலச்  செயலாளர் பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார்.  7 ஆவது ஊதிய குழு  பரிந்துரை ஊதிய நிலுவைத்  தொகையை உடனே வழங்க வேண்டும். டேங்க் சுத்தம்  செய்ய மாதம் ரூ.700 வழங்க  வேண்டும். எஸ்.ஆர். புக் பராமரிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களை நிர்வாகமே நல வாரியத் தில் இணைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  புதிய தலைவராக எஸ்.வீரமலை, செயலாளராக கே.பிரசாந்த், துணைத் தலை வர்களாக ஆர்.காமாட்சி, வி. கோபால், துணைச் செய லாளர் எம்.மாலதி மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக 7  பேர் தேர்வு செய்யப்பட்டனர்.