திருச்சிராப்பள்ளி, மே 31- ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் ‘ரோட்டோ எக்ஸ்போ 2024’ என்ற அனைத்துப் பொருட்கள் பொருட்காட்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டது. இந்த பொருட்காட்சியானது, அரசு பெண்கள் பள்ளியில் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்த நிதி திரட்டுவதற்காக நடத்தப்படு கிறது. இதன் தொடக்க விழா வெள்ளியன்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தார். மேயர் அன்பழகன், ரோட்டரி இன்டர்நே ஷனல் மாவட்டம் 3000-இன் 2024-25 ம் ஆண்டுக் கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் டாக்டர் கே.சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். இந்த பொருட்காட்சி மே 31, ஜூன் 1 (சனிக்கிழமை), ஜூன் 2 (ஞாயிற்றுக்கிழமை) என 3 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடு களை பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுபா பிரபு, செயலாளர் பராசக்தி ஆகியோர் செய்திருந்தனர். பொருட்காட்சியில் ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், கைவினைப் பொருள்கள், சேலை சுடிதார், பேன்சி, பொம்மைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்குமான 100 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.