districts

img

செங்குந்தபுரம் அரசுப் பள்ளியில் மழைநீரை வெளியேற்ற வடிகால் அமைத்திடுக! நகராட்சி தலைவரிடம் கவுன்சிலர் மனு

அரியலூர், ஜன.2- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.  நகர்மன்ற துணைத் தலை வர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி ஆணையர் அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் வரவேற்று பேசி னார். மன்ற பொருட்களை நகராட்சி மேலாளர் அன்புச் செல்வி வாசித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்  அனைத்து வாடுகளிலும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். அப்போது ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மழை காலங்களில் பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்கி  மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் மாணவர்கள் பள்ளி உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்து வரு கின்றனர். மேலும்  மழைநீர் தேக்கத்தால் பள்ளி குழந்தை களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாலும் பள்ளிக் குழந்தைகளை பாது காக்கும் வண்ணம் போர்க்கால அடிப்படையில் பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்காத வண்ணம் சரியான முறை யான வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீரை வடிகால் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்குந்தபுரம் வார்டு கவுன்சிலர் தங்க பாண்டியன் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆணையர் ஆகியோர் மனுவை ஏற்று தீர்மானம் நிறைவேற்றினார்.