புதுச்சேரி, ஜூலை 31- புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் உரையை கண்டித்து திமுக,காங்கிரஸ் உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது உரையை துவக்கியதும், எதிர்கட்சித் தலைவர் சிவா ஆளும் கட்சியின் மோசமான செயல்பாடுகள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கை களை பட்டியலிட்டார். ஆனால் ஆளுநர் தொடர்ந்து தனது உரை வாசித்துக் கொண்டிருந்தார். இதை யடுத்து எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனை வரும் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் தனது உரையில், “ஏழைகளின் நலனுக்காக தேவை யான நிதி வழங்குவதை அரசு உறுதி படுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்த ஒதுக்கீடு ரூ.12 ஆயிரத்து 250 கோடியில் ரூ.11 ஆயிரத்து 464 கோடி அதாவது 93.58 விழுக்காடு செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செல வினம் முந்தைய ஆண்டு செல வினத்துடன் ஒப்பிடுகையில் 6.55 சதவீதம் அதிகமாகும்” என்றார். தொடர்ந்து பேசிய ஆளுநர், “மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் நிதி குறி யீடாக மொத்த உள்நாட்டு உற்பத்தி திகழ்கிறது. கடந்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ.48 ஆயிரத்து 52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 7.54 சதவீதம் கூடுதல் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியின் தனிநபர் வருமானம் 7.61 சதவீதம் வளர்ந்துள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த துடன் பேரவைக் கூட்டத்தை வியாழக்கிழமைக்கு பேரவை தலைவர் செல்வம் ஒத்தி வைத்தார்.