தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற கட்டிடம் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தினை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டார். தஞ்சை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், தஞ்சை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.