districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை தின நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை தின நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ரோட்டரி சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். துணை ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் பங்கேற்றார். இதில் 5 சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.