districts

ஆளுநரை பதவி நீக்கம் செய்க! மதிமுக கையெழுத்து இயக்கம்

பட்டுக்கோட்டை, ஜூலை 9-  

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்திடக் கோரி மதிமுக சார்பில் பட்டுக் கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கையெ ழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நகர்  மன்ற தலைவருமான  ஜெயபாரதி விசுவ நாதன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை  சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மதிமுக செய லாளர் பேரா.தமிழ்ச்செல்வன், பட்டுக் கோட்டை நகர திமுக செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், பட்டுக்கோட்டை நகர  மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், திமுக இடிமுரசு நா.மணி முத்து, காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் ஆர்.ராம சாமி, விசிக சி.நா.சக்கரவர்த்தி, சிபிஐ சி. பக்கிரிசாமி, சிபிஎம் மோரிஸ் அண்ணா துரை, திராவிடர் கழகம் கே.தென்னவன் என்கிற ராஜா, மமக ஹெச்.ஜெகபர் அலி,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நாட்டாமை, ஐக்கிய முஸ்லிம் அமைப்பு சார்பில்  ஷேக்மைதீன், மதிமுக சார்பில் பட்டுக் கோட்டை நகர செயலாளர் எம்.செந்தில்குமார், மேற்கு ஒன்றியச் செயலாளர் ஏனாதி மதி,  கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பாலு உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

   ஏராளமான பொதுமக்களிடம் கையெ ழுத்து பெறப்பட்டது. 

;