districts

img

பள்ளிகளில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

தஞ்சாவூர், ஜூலை 14 -  

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, கூப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேராவூரணி தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தீத்தடுப்பு செயல் விளக்கம், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் போலி ஒத்திகைப் பயிற்சி செய்து காண் பிக்கப்பட்டது.  

    இதில், நிலைய அலுவலர் (பொ) சீனி வாசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள்  செயல் விளக்கப் பயிற்சி அளித்த னர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையா சிரியர் செல்லதுரை, பேரூராட்சி கவுன் சிலர் மு.த.முகிலன், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.  

திருத்துறைப்பூண்டி

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்டிசி மழலையர் மற்றும் தொ டக்கப் பள்ளியில் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலை யத்தின் சார்பாக தீ விபத்து விழிப்புணர்வு விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்விற்கு நிலைய அலுவலர் க.சுப்பை யன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.