மன்னார்குடி, அக்.27 - பிஎஸ்என்எல்-இன் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். 2 ஆவது விஆர்எஸ் திட்டத்தை கைவிட வேண்டும் உட்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிஎஸ்என்எல்இயு ஏஐபி டிபிஏ மற்றும் டிஎன்டிசி டபிள்யுயு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை கோட்டத்தின் சார்பில் மன்னார்குடி தொ லைபேசி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐபிடிபிஏ-வின் தஞ்சை கோட்ட துணைத் தலை வர் கே.ஆர்.பாஸ்கர் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்இயு-வின் மன்னார்குடி கிளைச் செய லாளர் சிவராஜ் ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். ஏஐபிடிபிஏ தஞ்சை கோட்டத் தலைவர் கே. பிச்சைக்கண்ணு கோரிக் கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தும் உரையாற்றினார். ஏஐபிடிபிஏ தஞ்சை கோட்ட துணைச் செயலாளர் சி. சேகர் நன்றி கூறினார்.