கிராம ஊராட்சிகளில் பணி புரியும் ஒஎச்டி ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி ஒஎச்டி ஆப்ரேட்டர், தூய்மைப் பணியாளர், தூய்மைக்காவலர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் அ.ரெங்கநாதன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.ரெங்கராஜ், வெங்கடேசன், கே.சேகர், அ.மணி, எஸ்.சிவானந்தம், பொன்ராஜ், எம்.கருணாநிதி மாவட்டக்குழு உறுப்பினர் அ.அழகேசன், எம்.பன்னீர்செல்வம், பி.கிருஷ்ணசாமி உடபட ஏராளமானோர் பங்கேற்றனர்.